Friday, September 30, 2011

இதப்படிங்க மொதல்ல ..

இந்த ஊரு வர வர ரொம்ப மோசம் .. ஒரு நல்ல ஃபார்வர்ட் கூட வரமாட்டேன்குது. அட அதாவது பரவாலைங்க, எதாவது உருப்படியா பேசினாலாவது அந்த "கருவ" சுட்ரலாம்ன அது கூட நடக்க மாட்டேங்குது.. என்ன செய்ய, நம்ம தான் நாதாரி நம்ம கூட சுத்தறதும் அப்படி தான் இருக்கு .. எதாவது "கருவ " யோசிக்கலாம்ன இங்க அதுக்கான tonic உம் இல்ல




மொத கம்பனில தான் வேலையா வேலை கொடுத்து மனுசன ஏதும் எழுத விடாம பண்ணுனாங்க. இங்க சும்மாவே உட்காரவச்சு சாவடிகிரங்க. சரி எதபத்தியவது எழுதலாம்ன இங்க ஒட்டகத்த தவிர ஒண்ணுமே இல்ல. என்ன கொடும சார் இது? [ இதுல "நீ சம்பாரிக்கற , எதாவது பிளான் பண்ணுனு" கூட இருக்கற பெருசுக கொடச்சல் வேற. இச்ச்சே ..இந்த சின்ன வயசுல எவ்ளோ கஷ்டம்!! ]

எப்பவுமே சும்மவேதானே இருக்கோம், வெளில எங்காவது ட்ரிப் போலாம்ன அதுவும் வழக்கம் போல பிளான் லையே தான் போகுது. வந்த 1 . 3 years கிட்ட தட்ட எல்லா மாசமும் எதாவது பிளான் பண்ணுவோம், எப்பவும் போல எவனாவது சொதப்புவான். இப்படியே தாங்க போகுது என்னோட சவுதி வாழ்கை. இது போதாதுன்னு ரூம்ல இருக்கற பெருசுகளோட அன்பு தொல்லை. எனக்கே சங்கடம் வரும் " நம்ம நிசமா ஒரு engineer தானா இல்ல LKG பையனா" நு , அந்த அளவுக்கு பண்ணி விடுவாங்க.சத்தியமா சொல்றேங்க, சோறு ஊட்டி விடறது மட்டும் தாங்க இன்னும் பாக்கி. இதுகளை எல்லாம் யார் புள்ள குட்டிய விட்டு இங்க வர சொன்னது?

இத பத்தி பேசினா, " ஆமா .. நீ கார்ட்டூன் பாக்றே " ங்க . எங்க " பென் 10 , டோம் அண்ட் ஜெர்ரி " பாக்கறது கூடவா தப்பு ? இல்ல தெரியாம தான் கேட்குறேன், எப்போ பார்த்தாலும் சீரியலும், ரியாலிட்டி ஷோவ்ஸ் பாக்க முடியுமா? இல்ல 3 மணி நேரம் படம் பாக்க எந்த சாப்ட்வேர் engineer க்கு டைம் இருக்கு ? ( சத்தியமா சொல்றேங்க , நான் சாப்ட்வேர் engineer தான்.. நம்புங்க ப்ளீஸ் .. ). காமடி பாக்கலாம்ன போட்டதையே போட்டு போட்டு torture பண்றாங்க.. .. விடுங்க.. நம்ம பாயிண்ட் க்கு வருவோம்.

எதாவது உருப்படியா இங்க பண்ணனும் நா, என்ன பண்ணலாம்னு தான் யோசிக்கணும். so .. இவ்ளோ பிரச்சனைகள் இருக்கறதால எனக்கு blog க்கு தீம் யோசிச்சு ஏதும் எழுத முடியமாட்டேன்குது.. அதுவும் இன்னொரு பிரச்சன என்னன்னா தமிழ் டைப் பண்றது..நமக்கு தமிழ் பேசுறதுக்கே கஷ்டம். வர வர சுடரதுகும் ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது. அதான் வேட்டிய வரிஞ்சு கட்டிட்டு , sorry கைய மடிசுட்டு நம்ம "யாரடி நீ மோகினி" தனுஷ் மாதிரி code அடிக்கமா blog அடிக்கிறேன். சப்போர்ட் பண்ணுங்க.

கடைசியா நான் சொல்லவரது என்னன்னா, எதோ இனிமேலாவது நல்ல தீம் கிடைக்கலேன்னா நானே மொக்க போடுறேன் ..

beware ..



Friday, September 16, 2011

Being Happy!

Ever wondered why you are happy when you are happy? The same way, have you given any simple thought why you are sad when you are sad?

If you would have tried, you would have come up with a series of questions for yourself, true but weird! The questions which only you have the answer.

You have to answer those questions you raised, ultimately the answer lies with in you.

But, it depends how you understood yourself and your brought up characteristics. Believe me, that’s the key! So you have to answer it correct, broadly you have the knowledge for it already. After all that’s what you learnt from life so far.

(PS. Its just my opinion. As my UH says “An opinion is an opinion. An opinion can be true or false. For you your opinion is true. From my point your opinion can be false!” )

So what I’m trying to say is, its Just my opinion. And opinion always differs. Its up to you how you are taking it up.

Back to the point. [ May be tomorrow, as I am leaving for the day :D ]

I’m back ..

It’s a big gap really. I never use to take so much time to complete my post once its started.

Here I am. Trying to explain the differences between being happy and really happy. Before that I like to tell you a incident that happened with one of my friend out here.

He got into my company same as me as a consultant. To be frank, I have never seen a person like him. He is too lazy. A person who doesn’t even throw the banana cover which he eats. He just put that beside his bed and sleep. By heart he is a good person. He is happy for what he is now. But when time passed by, the laziness made his real character worst. When everyone started pointing out his problem, he couldn’t say anything because others suffered due to his laziness.

[Obliviously, When you have such a person – who is not ready to clean the vessels properly, who is not ready to clean the apartment , who is having problem in buying things for room.. etc etc ].

The person is not having any regrets too for his activities. This makes even worst. Anyway, we slowly got used to it and we are on our way back. It couldn’t lost long. When the same characteristics continued in work too, he is not ready to improve himself. Not ready to learn.


And finally the day came. My Client don’t want him anymore. When this is communicated to my friend, he couldn’t take it anymore. He become sick and suddenly one day he started running here and there in the roads shouting “please save me! Please Save me!” . We guys don’t have any clue what to do. He seems totally collapsed and mentally upset. He asked everyone “What you did to me?”. “ Please Save me!”.

It become very difficult for us and our employer to pack him and send to his family. Some how he reached his family and under doctor observation.

There is reason for me to telling this incident and its related to our blog post theme.

If you want to be happy, You should

· Improve yourself constantly

· Always learn and gain experience

· Not dependent on others for completing the stuffs for you

· Never believe in everything.

· Etc etc

I tell all these. If you believe in the above, you are missing out some important thing. Its nothing but , “ It’s all about you!”.


You should know yourself. Your Strengths, your weakness and more importantly, “ Your Parents!”. If you know these three things you will know whether you are really happy or pretending to be happy.

If your “ parents are loving , never depends you financially, always supportive for you, always positive, have taught you all the means of survival, never let you to starve for love, never gave you up and believe in you always! “ Do you think you will be sad anymore?

Having this kind of parents are the key of your happiness. They have taught you the waysof love, survival, learning, confidence and most of all Independent of being yourself! Never dependent on anyone. Whether its objective or subjective!

What I am trying to say here is, the very basic of yourself being happy is to have this kind of loved ones. Where you can show your frustrations, in return you get just more love. The ones who never gave you up! The ones who always have the believe in you!


Being happy or sad, what you are now.. some where it ends at your parents and how they have brought you up. Brought you up and thought you to face the world.

One of my friend says “ You are never given choices..its YOU who CREATE choices in life...“

You are really happy when you have proper base, means your loved ones care for you. I know people who are being happy, say for an example my friend in this example… He was manipulated to being happy! Because his father forced him that being in “foreign” is a pride. And he believed that " Being happy is being here..!" .When his dreams shattered, He couldn't take it any more!

People are being happy with just dreams. That’s what I called just being happy.

The really happen one is when you can make any tough decisions, You can achieve any targets in your mind, You can win anyone , You will be happy always if you get your loving parents!

I know the times I have struggled a lot. I know my family situation when I was so needy. I know how my parents suffered some time during my education. But I never seen or heard from them apart from the support I got. My parents never hide anything from me, they believe that their kids should know the things what’s happening with their family and its situation. Still, my parents hid few things until they solved it. When I came to know those, really I felt how lucky I am to have such parents.

My parents made sure that their kids shouldn't spoil their dreams and future by telling their problems.

This is dedicated to my parents who is always very supportive to me. I wish everyone should get my kind of parents.


Now Just feel what is being happy and really happy!!

Please make sure to leave your comments how your parents supported you by all means for you to gain your position!

Monday, September 5, 2011

தெய்வ திருமகள்

எவ்வளவு பெரிய தவறு நடந்து விட்டது என்று யாருக்‍கும் புரியவில்லை. கடந்த இரண்டாயிரம் வருடங்களாகவே இந்தியாவில் இதுதான் நடந்து கொண்டிருக்‍கிறது. இப்படியே பழகிப் போய்விட்டார்கள் இந்தியர்கள். அலெக்‍சாண்டரிலிருந்து ஆங்கிலேயர்கள் வரை இந்தியர்கள் என்றால் இளப்பமாகிவிட்டது. இப்படியே இந்தியாவை சுரண்டி சுரண்டி தங்களை வளமாக்‍கிக்‍ கொண்ட அந்நியர்கள் ஏராளம். இந்த அவலம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்‍கிறது. எப்படியெல்லாம் திருடுகிறார்கள் இந்த அயல்நாட்டவர்கள். விட்டால் மொட்டை அடித்து, காதுகுத்தி சாப்பிடுவதற்கு வாழைப்பழமும் ஒன்றுக்‍கு இரண்டாக கொடுத்துவிட்டுச் செல்வார்கள் இந்த அந்நியர்கள்.


ஒரு திரைப்படத்தை கூட விடமாட்டேன் என்கிறார்கள். என்ன அநியாயம். ஒரு கதையை கருவாக சுமந்து,அதை மாதக்‍கணக்‍கில் வளர்த்து, அழகுபடுத்தி, திரைக்‍கதை அமைத்து,அந்தக்‍ கதையை, கதாநாயகனில் ஆரம்பித்த, தயாரிப்பாளர் வீட்டு நாய்க்‍குட்டி வரை சொல்லி புரியவைத்து தாவு தீர்ந்து ​போய்,ஆன் ப்ரொடக்‍ஷனுக்‍கு சென்று, கதாநாயகியின் அம்மாவுக்‍கெல்லாம் விசிறிவிட்டு, ஆப்பிள் ஜூஸ் கொடுத்து, சொல்வதைக்‍ கேட்காத கேமராமேன் மேல் கொலைவெறி இருந்தாலும் அன்புடன் அண்ணா என்று அழைத்து,அடிபணிந்து போய், போஸ்ட் ப்ரொடக்‍ஷனுக்‍குள் நுழைந்தால், மிச்ச இருக்‍கும் உயிரையெல்லாம் எடுக்‍க எடிட்டிங், சி.ஜி, கலர்கரெக்‍ஷன், டப்பிங் என வரிசை கட்டி நிற்கும் அத்தனையையும் கடந்து, படத்திற்கு அழகான தமிழ்ப் பெயரை வைத்து, யு சர்டிபிக்‍கெட் வாங்கி வெளியே வந்தால், திருநெல்வெலியிலிருந்து எதிர்ப்பு வரும் படத்தின் பெயரை மாற்றுகிறாயா? இல்லை வாயைச் சேர்த்து வெட்டவா? என்று.

பகீரதனைப் போல் பிரயத்தனப்பட்டு அத்தனையைம் கடந்து வந்தால்,படம் ரிலீசாகிய அடுத்த நாள் கூவி,கூவி விற்றுக்‍ கொண்டிருப்பான். அந்த சகோதரனையும் மன்னித்து விட்டு,வரவிருக்‍கும் நெஞ்சுவலியை எதிர்பார்த்துக்‍ கொண்டிருக்‍கும் பொழுது,அதே திரைப்படத்துக்‍கு வெள்ளையடித்து,டிஸ்டம்பர் பூசி,வேறு தலைப்பிட்டு இன்னொரு படம் ஓடிக்‍ கொண்டிருக்‍கும். முருகா ஏன்?சிறிது சிறிதாக கொல்ல வேண்டும். கையில் இருக்‍கும் வேலை எடுத்து நடுநெஞ்சில் குத்தி கொல்வதற்கு உன்னைவிட்டால் வேறு யாருக்‍கு உரிமையிருக்‍கிறது,என்று கடவுளிடம் தனியாக ஒரு இயக்‍குனர் பேசிக்‍ கொண்டிருப்பதைப் பார்த்தால்,பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். இயக்‍குனருக்‍கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றல்லவா நினைப்பார்கள். இப்படியா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஒரு திரைப்படத்தை டிட்டோவாக காப்பியடிப்பார்கள்.

அந்த சீன்பென் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருந்தேன். ஒரு தமிழ்ப்படத்தை காப்பியடிக்‍க எப்படி மனசாட்சி வந்தது அவருக்‍கு. மில்க்‍ படத்திற்கு கொடுத்த ஆஸ்கர் விருதையெல்லாம் பிடுங்க வேண்டும். எப்படி இப்படியொரு காப்பிடிக்‍கும் மனநிலையில் உள்ளவருக்‍கு ஆஸ்கர் விருது கொடுத்தார்கள். ஆஸ்கர் விருது கமிட்டியினர் இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டார்கள் என்பதை நம்பவே முடியவில்லை.

ஐ ஆம் சாம் என்கிற படத்தைப் பார்த்தால் புரியும் அனைவருக்‍கும். நமது விக்‍ரம் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தை அப்படியே டிட்டோ செய்து வைத்திருக்‍கிறார்கள். ஈயடிச்சான் காப்பி தெரியுமா உங்களுக்‍கு...

பரீட்சை எழுதிக்‍ கொண்டிருக்‍கும் போதுதான் ஒரு ஈ எழுத விடாமல் எப்பொழுதும் கையை சுற்றி சுற்றி வந்து தொந்தரவு கொடுத்துக்‍ கொண்டிருக்‍கும். அதை அப்படியே பேப்பரோடு பேப்பராக வைத்து நசுக்‍கிவிட்டால்,ரத்தம் தெறித்து பேப்பரில் ஒரு லோகோ விழும். இந்நிலையில்,பின்னே அமர்ந்து காப்பியடித்துக்‍ கொண்டிருக்‍கும் திறமைமிக்‍க மாணவன்,அதே போன்றதொரு லோகோ வேண்டும் என்கிற விருப்பத்தின் பேரில்,ஒரு ஈயை தேடிப்பிடித்து பேப்பருக்‍கு நடுவில் வைத்து நசுக்‍கி ஒரு லோகோவை உருவாக்‍குவான். விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்‍கு இந்த செயலைத்தான் பொறுத்துக்‍ கொள்ள முடியாது. இதற்குத்தான் ஈயடிச்சான் காப்பி என்று பெயர் வைத்திருக்‍கிறார்கள்.

இந்த காப்பியடிக்‍கும் கலை சீன்பென்னுக்‍கு எப்படி தெரிந்தது என்றுதான் புரியவில்லை. தெய்வத்திருமகள் படத்தை ஈயடிச்சான் காப்பி செய்து வைத்திருக்‍கிறார் மனசாட்சியே இல்லாத மனிதப்பிறவி. விக்‍ரமை பார்த்து அப்படியே நடித்திருக்‍கிறார். ஒருவன் தலைமுடியை வெட்டிக்‍ கொள்வதைக்‍ கூட அப்படியே காப்பியடிக்‍க வேண்டுமா என்ன?மெண்டலி சேலஞ்ட் மனிதர்களுக்‍கு மத்தியில் அந்த ஹேர் ஸ்டைல் புகழ்பெற்றதா என்ன?அவர்கள் எல்லாம் அப்படித்தான் வெட்டிக்‍ கொள்ள விரும்புவார்களோ,விக்‍ரம் ஏதோ,இப்படி தலைமுடியை வெட்டிக்‍ கொண்டால் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போன்று இருக்‍கும் என்று நினைத்திருப்பார். அதைப்பார்த்து அப்படியே காப்பியடிக்‍க வேண்டுமா என்ன?இதற்கு பெயர்தான் ஈயடிச்சான் காப்பி என்பது. ஒரு கிரியேட்டருக்‍கும்,காப்பியடிப்பவருக்‍கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்.

இவற்றைக்‍ கூட பொருத்துக்‍ கொள்ளலாம். ஆனால்,அந்த நான்கு பேர்..... கடவுளே....... அதே நான்கு பேர். ஏன்5 பேராக இருக்‍கக்‍ கூடாதா?இல்லை3 பேராக இருந்தால் அமெரிக்‍கர்கள் கோபித்துக்‍ கொள்வார்களா?இல்லை2 பேராக இருந்தால் படத்தின் தரம் குறைந்து போய்விடுமா? 4 பேர் என்றால்4பேர்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த4பேருக்‍கு வேறு வேலையே இல்லை. அந்த4 பேரை பார்த்துக்‍ கொள்ள வேறு ஆட்கள் யாரும் தேவையில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்து்க கொள்வார்கள். அவர்களின் ஒரே பிரச்சனை கதாநாயகனின் பிரச்சனைதான். அவர்களுக்‍கென்று சொந்தப் பிரச்சனை எதுவும் கிடையாது என்று தமிழில் சொல்லப்பட்டது போல் தெளிவாக சொல்வதற்கு அமெரிக்‍கர்களுக்‍கு அறிவு பத்தாது என்றே தோன்றுகிறது.


எவ்வளவுதான் காப்பியடித்தாலும் சந்தானத்தைப் போன்று ஒரு கேரக்‍டரை யோசிக்‍க முடிந்ததா அவர்களால்,உலகத்திரைப்படம் எடுக்‍கிறேன் என்று சொல்லிக்‍ கொள்கிறார்கள்.

குழந்தையை பெற்றுக்‍ கொடுத்ததும் ஒரு தாய்,சீன்பென் போன்ற பைத்தியக்‍காரனை பொறுத்துக்‍ கொள்ள முடியாமல் ஓடிவிடுகிறாள். இப்படி தமிழ்நாட்டில் எங்காவது நடக்‍குமா?பெற்ற தாய் குழந்தையை விட்டு எங்காவது ஓடிப்போவாளா?கணவன் குடிகாரனாய் இருந்தால் என்ன?கூத்தியாள் வைத்திருந்தால் என்ன?இல்லை கூனனாய் இருந்தால்தான் என்ன?கணவனே கண்கண்ட தெய்வம் என்கிற கொள்கையிலிருந்து வழுவாத பாரம்பரியம் மிக்‍க தமிழ் கலாச்சாரத்தில் வாழ்ந்த பெண்கள் உள்ள நாட்டில் இதுபோன்றெல்லாம் நடக்‍குமா?

அதனால் குழந்தையை பெற்றவளை சாகடித்து, அந்த குழந்தைக்‍கு ஒரு பணக்‍கார சித்தியை உருவாக்‍கி,அவர்களை ஒரே இடத்தில் சந்திக்‍க வைக்‍கும் விக்‍கிரமாதித்தியன் கதை ட்விஸ்ட் எல்லாம் இந்தியர்களுக்‍குத் தான் கை வரும். இதுபோன்ற ட்விஸ்ட் எல்லாம் காப்பியடிப்பவர்களுக்‍கு எப்படி புரியவரும்,கிரியேட்டருக்‍கு மட்டும்தான் தோன்றும்.

வசனத்தைக்‍ கூட விட்டு வைக்‍காமல் காப்பியடித்துவிட்டு,வசனம் என்று தங்களுடைய பெயரை போட்டுக்‍கொண்டார்கள் அந்த பெரிய மனிதர்கள். அடுத்தவர் கருத்தை கேட்காமல் எடுத்துக்‍ கொள்வதில் என்னவொரு தடித்தனம்?அதுவும் நமது தமிழ்ப் படம்2011ல் வெளியாவதற்கு முன்பே,படத்தை அப்படியே சுட்டு2001ம் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு கில்லாடிகளாக இருக்க வேண்டும்?ஒருபெயருக்‍காவது நன்றி தெய்வத் திருமகள் என்று பெயர்ப்பலகை போட்டார்களா?அதுவும் இல்லை. உரிமம் பெறாமல் திருடி எடுத்துவிட்டு கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தொலைக்‍காட்சிகளில் எல்லாம் பேட்டி கொடுத்திருப்பார்கள் அவர்கள். என்ன செய்வது. கடவுளுக்‍குத்தான் வெளிச்சம்..

என் நண்பன் கூறுகிறான் இப்படியே தொடர்ந்து கூறிக்‍ கொண்டிருந்தால் அந்த ஆங்கிலப்படத்தை இயக்‍கிய இயக்‍குனர் செருப்பால் துரத்தி துரத்தி அடிப்பார்,அதனால் அடக்‍கிவாசி என்று கூறுகிறான். எதற்கு அப்படி கூறினான் என்றுதான் புரியவில்லை.

அய்யா சாமி சத்தியமா சொல்றேன்...இதுவும் அடிச்சான் காப்பி தான் ..

நன்றி..