Tuesday, March 15, 2011

அன்பு உடன்பிறப்பே.,விம்மாதே...!ஊழல் புரிவது தவறில்லை என கொள்..!கூச்சமில்லாமல் கழகத்துக்கு வக்காலத்து வாங்கு..!

அன்பு உடன்பிறப்பே.,

மு க எழுதுவது..

தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...!

என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே...

நாம் என் செய்ய போகிறோம்..?

நாற்பதென்றார்கள்..முடியாதேன்றேன்..! ஐம்பதென்றார்கள்., முடிந்தால் பாரென்றேன்..! அறுபதென்றார்கள்.,மூஞ்சியை திருப்பி கொண்டேன்...! தக்காளி தூக்கிவிடுவோம் ராசாத்தியையும் கனிமொழியையும் என்றார்கள்...! பதறி போய் கொடுத்தே விட்டேன் என் கழக கண்மணியே..நான் குடுத்தே விட்டேன்...!

என் கழகமே அவர்கள்தானடா என் கண்மணியே...அவர்களை விட்டு நான் தனியே என் செய்வேன்...?

சில பட்டாபட்டி டவுசர் அணிந்த, கையில் பீடி வைத்த கோமான்கள் நம்மை ஏளனம் செய்யக்கூடும்! கலங்கிவிடாதே! அவர்களின் தீஞ்சொற்களை தீக்கிரையாக்க வேண்டாமா?

எப்படி சந்திக்கபோகிறோம் இத்தேர்தலை..மக்கள் விரோத தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிபிடிக்கிடையில் எப்படி மாற்ற போகிறோம் வாக்கு பெட்டிகளை..?

ஊழல் கலைஞரின் ஆட்சி முடியபோகிறதென சுடுகாட்டு நரிகளின் ஊளை ஆரம்பித்து விட்டது..மனசை திடமாக்கி கொள்..கண்மணியே...நாம் திராவிடர்கள்...நாம் பார்க்காத தேர்தல்கள் இல்லை..புறப்படு களம் நோக்கி..இந்த ஐந்தாண்டில் என்னடா செய்தீர்கள் கயவர்களே என மக்கள் காரி காரி மூஞ்சியில் உமிழ்வார்கள்...கழகக்கொடி எடுத்து மூஞ்சியை துடைத்துகொள்...கயவர்களில் சிலர் காரும்போது சளியும் சேர்ந்து வரும்..மனம் தளராதே...அதையும் துடைத்து ஜோப்பில் வைத்துகொள்...அன்னை தெரசா வழி வந்தவர்கள் நாம்..எச்சிலை துடைத்து எறிந்துவிட்டு சிரித்துக்கொண்டே வாக்கு கேள்..ஊழல் கட்சியை சேர்ந்த நாயே வெளியே போ என்பார்கள்..விம்மாதே...!

ஆம்.நாம் ஊழல் கட்சிதான்..யார் செய்யவில்லை ஊழல்..உன் தங்க தலைவன் நான் செய்யாத ஊழலா.?..இல்லை என் அன்பு தம்பி கன்னகதுப்பு துரைமுருகன் அடிக்காத காசா..? அல்லது சிரிச்ச மூஞ்சி ஆற்காடு வீராசாமிதான் உஷார் பண்ணாத துட்டா...என் அவ்ளோ தூரம் செல்கிறாய் என் அன்பு தம்பி..நான் பார்த்து டவுசரை நனைத்து நனைத்து விளையாடிய என் அன்பு பேரன் தயாநிதி அடிக்காத கோடிகளா...? இது அரசியல் தம்பி...நான் செய்வது வியாபாரம்..நாங்களெல்லாம் அடித்த பணத்தை பூசுனாபோல அடித்து பொத்துனாப்ல பாக்கெட்டில் போட்டுக்கொள்ளவில்லை!..? அந்த திறமை நம் ராசாவிடம் இல்லாதது தான் என் வருத்தமே...யாராலையும் உஷார் பண்ண முடியாத என் மகள் கனியையே உஷார் பண்ணியவர், மணியையும் உஷார் பண்ணிவிடுவார் என்று நம்பினேன்..லூசு கபோதி இப்புடி எங்கள வைத்துல அடிச்சு பாடையில ஏத்திட்டான்..மன்னித்து விடு உடன்பிறப்பே...கோவத்தில் கெட்டவார்த்தைகள் உள்நுழைந்துவிட்டது..!

ஊழலில் அறிவியலை புகுத்தியவர்கள் நாம்...எதோ ஒருமுறை ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிவிட்டோம் என பதறுதல் தவறு...எதிலும் மாட்டவில்லை இதில் மாட்டிவிட்டோம்..அவ்வளவே...காங்கிரஸ் மத்திய சர்க்கார் வரும் சூன் மாத இறுதியில் ஆ .ராசா குற்றமற்றவர் எனவும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அறிவித்து அவரை விடுதலையாக்கும்..அதற்கான ஆவணங்களும் கோப்புகளும் தயாரிக்கப்பட்டு மத்திய சர்க்காருக்கு அனுப்பட்டுவிட்டன...ஆகவே அரசியலில் மாட்டியதுதான் தவறே அன்றி, ஊழல் புரிவது தவறில்லை என கொள்..!

கூச்சமில்லாமல் கழகத்துக்கு வக்காலத்து வாங்கு..!

இன்னொரு முறை இரவு முழுதும் கண்விழித்து காமிராவெல்லாம் செட் பண்ணி கத்திக்கொண்டே ஜெயிலுக்குப் போவது கஷ்டமடா கண்மணியே.!

இதுதான் என் கடைசி தேர்தல் என்பேன்! இன்னும் மூன்று தேர்தலுக்கும் அதையே சொல்வேன்! கண்டுகொள்ளாதே கண்மணி! நீ இளிச்சவாயன் என்பதை மட்டும் மனதில் நிறுத்து. வீட்டை மறந்து கட்சி பணி செய்! நீ சிந்திக்க ஆரம்பித்தால் நானும் என் குடும்பமும் எங்கேயடா செல்வோம்?

ஆகவே திராவிட முன்னேற்ற கழகம் இத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்..நான் இறக்கும் தருவாயில் மாநில சர்க்கார் ஒரு மகனிடமும், மத்திய சர்க்கார் ஒரு மகனிடமும் இருக்க வேண்டும்..இதுவல்லவோ உனக்கும் நம் தமிழினத்திற்கும் பெருமை..!

வரலாறு படைத்தவன் நான்..என்னை வாழ வை உடன்பிறப்பே..!

எனக்காக இதை மட்டும் செய் என் உடன்பிறப்பே..எப்போதும் போல, இது நான் உன்னிடம் மன்றாடி கேட்கும் என் இறுதி வேண்டுகோள்..!

நான் சொல்லுவதை எல்லாம் நீ திறம்பட செய்து முடிப்பாய் என எனக்குத்தெரியும் ..உன்னிடம் நான் மனம்திறந்து ஒன்றே ஒன்றை மட்டும் கேட்க வேண்டும்...!

அட ..இன்னுமா நீ என்ன நம்புற..?

மு.க

திராவிட-- மு---க---.




** Thanks for the article palani sir....

No comments:

Post a Comment