Tuesday, May 10, 2011

Arrested for Laughing ;)

This is from an Article, which states, it is an actual trial in the UK.

A young woman who was several months pregnant was sitting in a bus. When
she noticed a young man smiling at her, she began feeling humiliated on
account of her condition. She changed her seat and he seemed more
amused. She moved again and then on seeing him laughing more, she filed
a court case on him.

In the court the man's defense was: When the lady boarded the bus I
couldn't help noticing she was pregnant.

She sat under an advertisement, which read 'Coming Soon - The unknown
boon'...

I was even more amused when she then sat under a shaving cream
advertisement, which read:
'William's stick did the trick'.

Then I could not control myself any longer, when on the third move she
sat under an advertisement, which read: 'Dunlop Rubber would have
prevented this accident'...

The case was dismissed. The judge fell off his chair laughing..!



The Next one is too good.. :)



Oh !!!!!! Women !!!!!

Yesterday I was having some work done at the Maruti dealer. A woman came in and asked for a seven-hundred- ten.

We all looked at each other, and the mechanic asked, "What is a seven-hundred- ten?"

She replied, "You know, the little piece in the middle of the engine. I lost it and need a new one. It had always been there."

The mechanic gave the woman a piece of paper and a pen and asked her to draw what the piece looked like. She drew a circle and in the middle of it wrote 710 !!

He then took her over to another car which had the hood up and asked, "Is there a 710 on this car?"

She pointed and said, "Of course, it's right there."

Now go to the photo below to learn what a 710 is..........

...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
....
...
...
...
...
...
...
...
...
...




Women ? The mechanic fainted!!



Have FUN :)

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்!

அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது.

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''


சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனதுசொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

நன்றி........ ஆனந்த விகடன்

Sunday, April 10, 2011

ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம்! !

ழலை எதிர்த்து நாமெல்லாம் இதைப்போல எழுதி விட்டும் பேசி விட்டும் அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிடுகிறோம் ஆனால் அன்னா ஹஸாரே என்ற 72 வயதானவர் (இவர் ஒரு சமூக ஆர்வலர் ஆவார் இதற்கு முன்பே பல போராட்டங்களை ஊழலுக்கு எதிராக நடத்தி இருக்கிறார். மகாத்மா காந்தி மீது பெரு மதிப்பு வைத்து இருப்பவர்) ஊழலுக்கு எதிராக சட்ட மசோதா கொண்டு வரக்கூறி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி அதில் முதல் கட்ட வெற்றியும் பெற்றுள்ளார், இதற்கு கிரண் பேடி உட்பட பலர் ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்து உள்ளார்கள் இதற்கு மேலும் ஆதரவு கூடும் என்று நம்புகிறேன்.


நான் கூட இது பற்றி NDTV.com ல் பார்த்த போது அவருடைய படத்தை மட்டும் பார்த்து விட்டு அதில் கூறியுள்ளதை படிக்காமல் சரி! எதோ ஒரு தாத்தா பொழுது போகாம எதோ போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார் போல என்று நினைத்து விட்டேன் .ஊழல் இந்தியாவை வேகமாக அழித்து வரும் ஒரு கொடிய நோயாக படு வேகமாக வளர்ந்து வருகிறது. அதுவும் சமீபமாக இதன் போக்கை பார்த்தால் பயங்கரமாக இருக்கிறது. தினமும் அந்த அரசியல்வாதி இவ்வளோ கோடி கொள்ளை அடித்தார் இவர் இவ்வளோ கையாடல் செய்தார் என்று வருவதைப் பார்த்தால் வருகிற ஆத்திரம் கொஞ்ச நஞ்சமல்ல. தற்போது ஆயிரத்தில் எல்லாம் ஊழல் செய்வது கீழ் நிலை ஊழியர் மட்டும் தான் தற்போதெல்லாம் லட்சம் கோடி (ஸ்பெக்ட்ரமை விடுங்க அது இல்லாமையே பல கோடி கொள்ளைகள் வந்து விட்டது.. ) கொள்ளைகள் சர்வ சாதாரணமாகி விட்டன.


இதை தேர்தல் கமிசன் போல தன்னிச்சையாக அரசின் கட்டுப்பாடில்லாமல் செயல்படும் ஒரு அமைப்பின் மூலம் தான் சரி செய்ய முடியும் என்று ஜன் லோக்பால் என்ற அமைப்பை செயல்படுத்தக்கூறி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இருக்கிறார். இதன் மூலம் இந்த அமைப்பு ஊழல் செய்த அனைவரையும் விசாரிக்க முடியும் எந்த வித கட்டுப்பாடுமில்லாமல். இதில் மாநில அரசோ அல்லது மற்றவர்களோ இதில் தலையிட முடியாது அதாவது யோவ்! அவன் நம்ம ஆளுயா! இந்த விஷயத்தை கண்டுக்காதே! என்று கூற முடியாது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் தற்போது தமிழகத்தில் தேர்தல் கமிசன் அனைவரையும் சுளுக்கு எடுத்து வருவதைப்போல ஊழல் செய்யும் அனைவரையும் பெண்டு எடுக்க முடியும்.


ஜன் லோக்பால் மூலம் என்ன செய்ய முடியும்


மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் லோகாயுக்தா அமைப்பும் நிறுவப்படும். உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவ்வமைப்பும் சுதந்திரமான அமைப்பாகும். இதன் விசாரணையில் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளின் குறுக்கீடோ இருக்காது. மற்ற வழக்குகள் போல் பல மாமாங்கங்களாக விசாரணை நடைபெறாமல், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் எந்தவொரு வழக்கு விசாரணையும் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு, அடுத்த ஓராண்டில் வழக்கும் முடிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய நபருக்கு தண்டனையும் அளிக்கப்பட்டு விடும்.


ஊழல் மூலம் ஈட்டப்பட்ட, அரசாங்கத்திற்கு நட்டமேற்படுத்தப்பட்ட தொகை தண்டனைக்காலத்தில் மீட்கப்படும். பொது மக்களுக்கு எந்தவொரு அரசாங்க அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி முடித்துக் கொடுக்கப்படா விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ, தொடர்புடைய அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவ்வபராதம் மனுதாரருக்கு நிவாரணமாக அளிக்கப்படும். ஆக உங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை பெறுவதில் மெத்தனமோ, தாமதமோ ஏற்படுத்தப்பட்டாலோ, நீங்கள் இவ்வமைப்பை அணுகலாம். இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு அது கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நிவாரணமும் பெற்றுத் தரப்படும். தவிர தரமற்ற சாலைகள், பஞ்சாயத்து அளவில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றையும் நீங்கள் இவ்வமைப்பின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம். இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய குற்றவாளி தண்டனை பெறுவார்.


லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள். நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம் இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள் தவிர்க்கப்படும். ஜன் லோக்பால் உறுப்பினர்களே ஊழல்வாதிகளாக இருப்பின், அவர்கள் மீதான புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்படுவர். புகார் அளிப்பவர்கள் மற்றும் புகாரில் தொடர்புடையவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.


நினைத்துப்பாருங்க இது போல சட்டம் வந்து ஊழல் குறைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நம்ம நாட்டில் ஊழல் மட்டும் இல்லை என்றால் ஒரு பய நம்மை எதுவும் செய்ய முடியாது.. பட்டாசாக நம் நாடு முன்னேறும் ஆனால் பாருங்க இவற்றை எல்லாம் இப்படி நடந்தால்! என்று நினைத்துப்பார்த்து சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியை நிலையில் தான் நாம் இருக்கிறோம். எதுவும் நிஜமாக மாட்டேங்குது. நம்ம நாட்டில் இருக்கும் வளத்திற்கும் நம்மவர்கள் இடையே இருக்கும் திறமைக்கும் அமெரிக்கா எல்லாம் ஒன்றுமே இல்லைங்க. நம்மிடமும் ஊழல் இல்லாமையும் ஒழுக்கமும் இருந்தாலே போதும் அடி தூள் கிளப்பலாம் ஆனால் இவை அனைத்தும் நம்மால் செய்யக்கூடிய செயல் என்றாலும் செய்யாமல் இருக்கிறோம்.


நாம் எழுதி எல்லாம் ஒன்றும் நடக்கப்போவதில்லை இதை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறேன். நான் இதற்காக என்ன செய்தேன்.. ஒரு துரும்பு கூட என்னளவில் இதற்காக நான் செய்யவில்லை. எனக்கே வெட்கமாக இருக்கிறது.. ஒரு வெங்காயமும் செய்யவில்லை! இதைப்போல எழுதுவதை தவிர. சும்மா இங்கே உட்கார்ந்துட்டு ஊழல், அராஜகம், இந்தியா அழியப்போகிறது.. நாடு கெட்டு விட்டது.. பூமா தேவி வாய பொளக்கப்போறா எல்லோரும் உள்ளே போகப்போறோம் ஐயோ அம்மா! என்று வசனம் பேசுவதில் என்ன அர்த்தம். இதைப்போல பேசுவதை பார்த்தால் இப்போதெல்லாம் எனக்கே காமெடியாக இருக்கிறது.


இவை எல்லாம் கூட உங்களுக்கு இதை பகிர மட்டுமே நான் ஒன்றும் செய்யப்போவதில்லை.. வெளிநாட்டில் இருக்கிறேன் குறைந்த பட்சம் என்னால் செய்யக்கூடிய ஒட்டுரிமையைக் கூட என்னால் பயன்படுத்த முடியாது. பின்ன இது பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? ஒன்றுமே செய்வதில்லை ஆனால் நாடு முன்னேறனுமாம்! இதை கேட்டால் உங்களுக்கே சிரிப்பு வரலை…


ஆனா நம்மைப்போல ஹசாரே நினைக்கவில்லை. அதற்கான முயற்சியை எடுத்து இருக்கிறார் அவரளவில். இது வெற்றி பெறுமா அல்லது வழக்கம்போல புஸ்ஸுன்னு போய் விடுமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.. சரி! ஒரு நல்ல விஷயம் செய்து இருக்கிறார் அவரை பாராட்டனும் என்று தோன்றியது எழுதினேன். கிரிக்கெட் சினிமா பற்றி எழுதறோம், சுயமரியாதையை சுத்தமா மதிக்காதவங்களை பத்தி கவிதை எழுதறோம், இந்த தாத்தா பற்றி எழுதினால் என்ன குறைந்தா போய் விடப்போகிறேன்.


இங்கேயும் ஒரு பெரியவர் கலைஞர் இருக்கிறார் தேர்தல் கமிசன் நடவடிக்கைகளை, மக்களுக்கு எதிராக கமிசன் நடக்கிறது என்று முழங்கி “எமெர்ஜென்சி” என்று பெரிய வார்த்தைகளை எல்லாம் கூறி மக்களது (வணிகர்கள்) பார்வையை தேர்தல் கமிசனுக்கு எதிராக திருப்பி விட்டுக்கொண்டு இருக்கிறார். தேர்தல் கமிசன் நடவடிக்கைகளுக்கே இதைப்போல கூறினால் ஜன் லோக்பால் போன்றவை எல்லாம் (ஒருவேளை… ஒருவேளை தான்) வந்தால் ஐயோ அம்மா கொல்றாங்களே! என்று கூறுவாரோ!


சில தினங்களுக்கு முன்னாள் கூட 5 கோடி ஒரே சமயத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கு என்ன கூறப்போகிறார்கள்? நேர்மையாக நடப்பவன் எவனாவது ஆம்னி பஸ் டாப்ல ஐந்து கோடியை கொண்டு செல்வானா! பிடிபட்டது ஐந்து கோடி பிடிபடாதது….. பாருங்க எவ்வளவு அநியாயம் நடக்கிறது என்று.


தற்போது ஊழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஓரளவு பரவி வருகிறது. இதற்காக ஏதாவது செய்யணும் என்று நினைக்கிறார்கள் அதை எப்படி சரியாக துவங்குவது என்று தெரியாமல் விழிக்கிறார்கள் அல்லது யார் முன்னெடுப்பது என்ற பிரச்சனையில் குழம்புகிறார்கள். இதோ! அன்னா ஹஸாரே ஆரம்பித்து வைத்து இருக்கிறார் இது வெற்றி பெறுமோ இல்லையோ அது வேறு விஷயம் இதை நாம் மற்றவர்களிடம் கூறுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லையே. நம்மால் எதுவும் நடக்கவில்லை என்றாலும் யாராவது இதற்காக முயற்சிக்காமலா போய் விடப்போகிறார்கள்!


ஊடகங்கள் கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் இதற்கு பாதி கொடுத்தால் கூட புண்ணியமாகப்போகும்.


ஜன் லோக்பால் மேலும் தெரிந்து கொள்ள http://indiaagainstcorruption.org/ செல்லுங்கள்


Please vote : http://voteforindia.org/home/enrolperson

எதை எதையோ ... 4 பேருக்கு அனுப்பினா எதோ நல்லது, 10 பேருக்கு அனுப்பினா ரொம்ப நல்லதுன்னு.. forward செய்யறோம் இந்த மாதிரி உருப்படியான செய்திய அப்படி forward செஞ்சா உன்மையாவே நல்லது நடக்கும்.

Thursday, April 7, 2011

The burnt biscuit













Mom liked to make dinner with extra care. And I remember one night in particular when she had made it after a long, hard day at work. That evening, mom placed a plate of eggs, sausage and extremely burned biscuits in front of dad. I remember waiting to see if anyone noticed.



All dad did was reach for his biscuit, smiled at mom and asked me how my day was at school. I don't remember what I told him that night, but I do remember watching him smear butter and jelly on that biscuit and ate every bite.



When I got up from the table, I remember hearing mom apologize to dad for burning the biscuits. And I'll never forget what he said: Honey, I love burned biscuits.



Later that night, I went to kiss Daddy good night and asked him if he really liked his biscuits burned. He wrapped me in his arms and said, "Your Momma put in a hard day at work today and she's real tired. And besides - a little burnt biscuit never hurt anyone!"



You know, life is full of imperfect things.....and imperfect people. I'm not the best at hardly anything, and I forget birthdays and anniversaries just like everyone else.



What I've learned over the years is that learning to accept each others' faults - and choosing to celebrate each other’s differences - is one of the most important keys to creating a healthy, growing, and lasting relationship.



Because in the end, you are the master of your own life, to be happy or unhappy, to be positive or negative.



We could extend this to any relationship. In fact, understanding is the base of any relationship , be it a husband-wife or parent-child or friendship.



Don't put the key to your happiness in someone else's pocket - keep it in your own.



So please pass me a biscuit, and yes, the burnt one will do just fine...



Moral of the story – No one is perfect in this world. To build and maintain a relation it is important to appreciate the positives and ignore the negatives

Wednesday, April 6, 2011

சிந்திய ரத்தம் என் இந்திய ரத்தம் ..

“ என்று தனியும் இந்த சுதந்திர தாகம் ”.

Have you guys remember this? You might not.. Because its too old.. and we forgot those things and the dedications shown by the people of that time. We forgot the freedom fighters..


we forgot the sacrifices they have made.. and “WE FORGOT THE BLOOD THEY SHATTERED “ what a shame!!

Sorry..I forgot that we are shameless.

We forgive the corrupted politicians who betrayed us... Yes we are shameless!!


We forgive the corrupted, ruthless police who betrayed us and the law.. Yes we are shameless!!


We forgive the corrupted, boneless administrative officers who sucks the working population blood.. Yes we are shameless!!


We forgive the corrupted, brainless law makers/passers who couldn’t punish a proved criminal.. Yes we are shameless!!


We forgive the corrupted, senseless, lazy judgment system who always go against the weaker ones .. Yes we are shameless!!


We forgive the corrupted, useless media whose only aim is to make money even on a molested girl situation.. Yes we are shameless!!


We forgive the corrupted, meaningless government system which only separates us by region, language, cast, class, sex and color… Yes we are shameless!!


We forgive the corrupted, useless educational system which couldn’t make a difference.. Yes we are shameless!!

Most of all… We forgive ourselves.. The one who doesn’t have the dignity.. The one who doesn’t know even the value of self dignity and respect.. The one doesn’t even bother to do his duty.. Yes we are shameless!!


தனிமனித ஒழுக்கமிண்மை என்பது ஒரு மிகப்பெரும் குற்றம்... இதுவே மேற்சொன்ன எல்லாவற்றிகும் முலகாரனம்.”

When will we understand this? When ever a bad thing happen to us shouldn’t we unite immediately ? Should our blood goes red when we feel this sentence ? Aren’t we supposed to take out the word “Shameless” from our face?!

சிந்திய ரத்தம் என் இந்திய ரத்தம் ..” Try to understand the meaning of this...


Jai Hind.


Indian.